திங்கள், பிப்ரவரி 28

சமைக்கலாம் வாங்க ...

வெஜ் பொங்கல்






பொதுவா பொங்கல் சுடச்சுட சாப்பிட்டாத்தான் சுவையா இருக்கும். ஆனா வெஜ் பொங்கல் ஆறினாலும் டேஸ்ட்தான். அதனால தைரியமா லஞ்ச்சுக்கும் கொண்டுபோகலாம். செஞ்சு சாப்பிட்டு பாருங்க...!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 4 கப்

பாசிப்பருப்பு - 1 கப்

பெரிய கேரட் - 1

பச்சை பட்டாணி - 1/2 கப்

இஞ்சி - 10 கிராம்(பொடியாக நறுக்கியது)

பூடு - 4 பல்

சீரகம் - 1 டீ ஸ்பூன்

மிளகு - 1 டீ ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

கடுகு உளுந்து - 1/2 டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கொத்து

மல்லித்தழை - சிறிதளவு

எண்ணைய் - 1 குழிக்கரண்டி

நெய் - 100 மி.லி.

முந்திரி - 15

உப்பு - தேவையான அளவு


செய்முறை:

* இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* கேரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* அரிசியை உப்பு போட்டு, நன்கு குழைய வேக வைக்கவும்.

* பாசிப்பருப்பை சிம்மில் சிவக்க வறுத்து, நன்கு குழைய வேக வைக்கவும்.

* தனித்தனியே வேக வைத்த சாதத்தையும் பருப்பையும் ஒன்றாக கிளறவும்.

* கொழ கொழன்னு வருவதற்கு பருப்பு வேக வைத்த தண்ணியை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ண வேண்டும்.

* சாதம் செட்டாகும் நேரத்தில்..., ஒரு கடாயில் எண்ணை ஊற்றி கடுகு உளுந்து, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

* பொரிந்த பின் கேரட்டையும் வேக வைத்த பட்டாணியையும் சேர்த்து வதக்கவும்.

* சாதம், பருப்பு, வதக்கிய காய் எல்லாவற்றையும் நன்கு மிக்ஸ் பண்ணி, 2 கப் தண்ணீ­ர் சேர்த்து குக்கரில் 10 நிமிடம் சிம்மில் வேக வைக்கவும்.

* இறக்கியவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, கொத்தமல்லி, மீதமுள்ள நெய் ஊற்றி பரிமாறவும்.

* தண்­ணீருக்கு பதில் தேங்காய்ப் பால் பயன்படுத்தினால் சுவை இன்னும் பிரமாதமா இருக்கும்.

* புதினா சட்னி இதற்கு சரியான சைட் டிஷ்!

5 கருத்துகள்:

  1. சமைச்சதில மிச்சம் இருந்தா அனுப்புங்கள்...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வலைப்பதிவில் மறுமொழி மட்டுறுத்தலைச் செயற்படுத்தி இருந்தால் தயவு செய்து CAPTCHAவை நீக்கி விடுங்கள். பல சமயங்கள் மறுமொழியை விட CAPTCHA பெரிதாக இருக்கிறது !! இதை நீக்க blogger dashboard – settings – comments – show word verification for comments என்பதை no என்று தெரிவு செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றாகதான் இருக்கிறது.எதுக்கும் முயற்சி செய்து பார்த்திட்டு சொல்கிறோம் எப்பிடீன்னு.........

    பதிலளிநீக்கு
  4. சகோதரன் மதி சுதா அவர்களுக்கு மிகவும் நன்றி ...எதிர்காலத்தில் கண்டிப்பாக சிறந்த ஒரு விருந்தை இளைஞர் உலகம் ஊடக அனுப்பி வைப்போம் ..தங்கள் கருத்துக்கள் தொடரட்டும் ...

    பதிலளிநீக்கு
  5. சகோதரன் சித்தாரா மகேஷ் அவர்களுக்கு மிகவும் நன்றி ...ஆம் தங்கள் கருத்துக்களை தொடர்ந்தும் வரவேற்க்கிறேன் ..

    பதிலளிநீக்கு