திங்கள், மே 9

நயனதாரா கல்யாணம் நடந்தால் பார்க்கலாம்



எனக்கு ஏற்ற பெண்ணாக அமையும் போது திருமணம் செய்து கொள்வேன். அது காதல் கல்யாணமாகக் கூட இருக்கலாம் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.
அதை விட முக்கியமாக நயனதாரா கல்யாணம் நடந்தால் பார்க்கலாம் என்றும் அவர் பொடி வைத்துப் பேசியிருப்பதால் நயனதாரா கல்யாணத்தில் ஏதாவது சிக்கல் வருமோ என்ற பரபரப்பும் கூடியுள்ளது.


தனது தங்கைக்கு திருமணம் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், அது முடிந்த பின்னர் தான் தனது கல்யாணம் குறித்து யோசிக்கப் போவதாகவும் சிம்பு கூறுகிறார்.

தனக்குப் பிடித்த, ஏற்ற பெண்ணாக அமைந்தால் கல்யாணம் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ள அவர் தனது கல்யாணம், காதல் கல்யாணமாகவும் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.  நயனதாரா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாரே என்ற கேள்விக்கு, கல்யாணம் நடக்கட்டும் பார்க்கலாம் என்று பொடி வைத்துப் பேசியுள்ளார் சிம்பு.

வானம் படத்தின் வெற்றியால் சிம்பு பெரும் சந்தோஷமடைந்துள்ளார். அதே சூட்டோடு தற்போது "ஒஸ்தி" என்ற புதிய படத்தில் நடிக்கப் போகிறார். தரணி தான் படத்தை இயக்குகிறார். தபாங் படத்தின் ரீமேக் தான் இது. இதில் சிம்பு நாயகனாக நடிக்கவிருக்கிறார். படத்தின் பூஜை முடிந்துவிட்டது. படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக