கவிதை .. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை .. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 11

என் மனம் கவர்ந்த தபு ஷங்கரின்

சேலையோரப்பூங்கா
எல்லா பெண்களுமே 
நிற்க்கும் காரைக் கடக்கையில் 
அதன் கண்ணாடியில்
தங்களை சரி செய்து கொள்கிறார்கள் ...
நானோ 
உன்னை கடக்கையில் 
உன் முகத்தை பார்த்தே சரி செய்து கொள்கிறேன் ...

எதற்கு எடுத்தாலும்  வெட்க்கப்படுகிராயே
என்று என்னை கேலி செய்யாதே
இந்த உலகில் உன்னை தவிர வேறு யாராலும் 
என்னை வெட்க்கப்படுத்த முடியாது.... 

கட்டிக்க போறவனை டேய் என்று கூப்பிடாலாமா
என்று அதட்டுகிறாள் அம்மா
கட்டிக்க போறவனை 
கூப்பிடவென்று
கண்டுபிடிக்கப்பட்ட சொல்தானே டேய் ...

 யமுனைதான் 
எனக்கு புண்ணிய நதி 
அதுதான் காதல் வாழும் தாஜ்மஹாலை 
தொட்டுக்கொண்டு ஓடுகிறது ....

என்னிடம் இருக்கும் 
எந்த அழகு சாதனத்தை விடவும் 
என்னை அழகாக்கி விடுகிறது 
உன் ஒற்றை பார்வை ....

நீ இல்லாமல் 
உயிர் வாழமுடியாது என்று
நீ சொல்வதை 
நம்பமாட்டேன் 
நீ பிறந்து மூன்று வருடங்கள் கழித்துதானே
நான் பிறந்தேன்
அந்த மூன்று வருடங்கள் 
நான் இல்லாமல்த்தானே 
நீ உயிர் வாழ்ந்திருக்கிறாய் ....

வேறு ஆண்கள் என்னை பார்க்கையில்
முகத்தை திருப்பி கொள்கிறேன் நான்
நீ பார்க்கும் போது மட்டும் 
குனிந்து கொள்கிறேன் 
இதிலிருந்து உனக்கு தெரியவேண்டாமா
நான் உன்னைத்தான் 
காதலிக்கிறேன் என்று .....

நீ என்னை காதலிக்க ஆரம்பித்து
இத்தனை நாள் ஆகியும்
என்னிடம் காதலை சொல்லாமல் 
நீ தவிப்பதை பார்த்து 
என்ன இவன் பயந்தான்கொள்ளியாய் 
இருக்கிறான் 
என்று கவலை எல்லாம் கொள்ளவில்லை ...

காதலை சொல்ல இப்படி தவிக்கிறான் எனில்
கண்டிப்பாய் இதுதான் இவனுக்கு
முதல் காதலாய் இருக்கும் என்கின்ற மகிழ்ச்சியில்
உன் தவிப்பை ரசித்து கொண்டு இருக்கிறேன்.....

(இவை சில வரிகள் )

வியாழன், மார்ச் 3

என் பிரியமான சிநேகிதியே .... நாம் மீண்டும் பிரிய போகிறோம்..சந்திக்காமலேயே ...



என்னுடைய வானத்தில்
என்றோ தொலைந்து போன
ஒரு நட்ச்சத்திர பூவொன்று
இன்று ரயிலின் யன்னலோரம்....

என் வாழ்க்கை பயணத்தின்
எதோ ஒரு நிறுத்தத்தில் ஏறி
எதோ ஒரு நிறுத்தத்தில் இரங்கி போய் விட்ட
உன் எழில் முகத்தை
என் இதயத்தில் பதிந்துள்ள
உன் நட்பு முகத்தோடு ஒப்பிடு பார்க்கிறேன்....

உதடுகளோடு சேர்ந்து
கண்களும் சிரிக்கும்
அந்த ஊமைஜ்சிரிப்பு
நீ ஷந்தோஷித்திருப்பதை
நிஜ்ஜயயபடுத்துகிறது

அன்று என்னோடு
நட்பாய் சேந்து இருந்திருந்த உன் கைகளில்
இன்று காதலோடு கை கோர்த்து இருக்கும்
உன் கணவனை கண்டு களிப்படைகிறேன்

நீயே என்னை
கவனிக்காமல் போனாலும்
உன் குஞ்சு குழந்தை
என்னை பார்த்து
நட்பாய் சிரிக்கிறது
ஓ உன் ரத்தம் அல்லவா ....

தட தடத்து ஓடிக்கொண்டு இருக்கும்
ரயிலின் சத்தத்தையும் தாண்டி
உன் உதடுகள் அன்று
உச்சரித்த அந்த நட்பின் வார்த்தைகள் என்னுள்ளே
ஒலித்து கொண்டே இருக்கிருக்கின்றன ......

ஜன்னல் காற்று
உன் கூந்தல் கலைத்து
என்னுள்ளே சங்கமிக்கும் போது
நம் நட்பின் அழகிய அந்த பழைய வாசனையை
சுவாசிகின்றேன்.........

என் பிரியமான சிநேகிதியே ...

இதோ ரயில் நிக்க போகிறது
நான் இறங்க போகிறேன்
நாம் மீண்டும் பிரிய போகிறோம்
சந்திக்காமலேயே .....

போய் வருகிறேன்
என்றோ ஒருநாள் மீண்டும்
எங்காவது சந்திப்போம்
என்ற சந்தோசத்தோடும்
உன் நினைவுகள்
ஏற்றி வைத்த உன் நட்பு சுமையோடும்
இறங்க போன எனக்கு
உன் குழந்தை சிரித்து கொண்டே பறக்கவிட்டது முத்தத்தை ...
நெஞ்யில் நிரப்பி கொண்டு
அதே பழைய நட்பின் நினைவுகளை சுமந்து
இறங்கி போகிறேன் .

திங்கள், பிப்ரவரி 28

வினாக்களின் முடிவில் விடைகள் அற்ற வினாவாய் நீண்டு கொண்டே செல்கிறாய் நீ ........




அழகான ஒரு மாலைப்பொழுது 
ஆதவன் கை அசைக்கும் அந்த வேளை
அழகிய ஒரு கடற்பரப்பில் 
ஏதோ சிந்தனையில் நான் ........

ஆம்..

நான் ..

உனக்காக என் நினைவுகளை 
சேகரிக்க ஆயத்தாமாகும் அந் நேரம் ......

ஆம் ...
எனக்காக எங்கோ பிறந்த நீயும் 
உனக்காக இங்கே பிறந்த நானும்
நினைவுகளால் வருடப்படும் நேரம் தான் அது......

நீ யார் ??

உனது பெயரென்ன ??

நீ வாசம் செய்வது எங்கே ??

உனக்காக காத்திருக்கும் எனக்கு..... 
எனக்காக காத்திருக்கும் உனக்கு ....

ம்ம்ம்ம்ம்ம்....

நாம் காதலிக்கவில்லை ..
நாம் இன்னும் கண்களால் கதை பேசவில்லை ....
ஆனால் மனத்தால் மட்டும் எப்படி ??

நீயும் நானும் நினைவுகளால் தாலாட்டபடுகிறோம் ...
உனக்கென நீ என்னையும்
எனக்கென நான் உன்னையும்
சேகரிக்க தாயாராகும் நேரம் இது ...

என் நெஞ்சில் 
வாசம் செய்ய இருப்பவனே ... 
ஏதோ ஒரு நாள் 
எங்கோ ஒரு சாலையில் 
நாம் தவற விட்ட ஏதோ ஒரு பயணப்பாதையில் ...
நாம் சந்திப்பு ஆரம்ப மாகி இருக்கலாம் ..

ஆனால் ..

சந்திக்காமலேயே நாம் பிரிந்ததால்த்தான் என்னவோ
இன்று உன் நினைவுகளை நான் சேகரிக்க ஆயத்தமாகிறேன் ..

நீ யார் ?

வினாக்களின் முடிவில் 
விடைகள் அற்ற வினாவாய்
நீண்டு கொண்டே செல்கிறாய் நீ .........