நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 22

நயன்தாரா நடித்தால் மட்டுமே, அந்தப்படத்தில் நானும் நடிப்பேன்



ஸ்ரீ ராமராஜ்யம் படத்தில் சீதையாக நடித்த நயன்தாராவுக்கு, மீண்டும் ஒரு படத்தில் சீதையாக நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. நயன்தாரா சீதையாக நடித்தால் மட்டுமே, அந்தப்படத்தில் நானும் நடிப்பேன் என்று ஒரு ஹீரோ அடம்பிடித்து வருகிறார்.விரைவில் பிரபு‌தேவாவை கரம்பிடிக்க இருக்கும் நயன்தாரா, தெலுங்கில் கடைசியாக நடித்த படம் ஸ்ரீ ராமராஜ்யம். ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில், பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக சீதை வேடத்தில் நடித்து இருந்தார் நயன்தாரா. சமீபத்தில் வெளியான இப்படம், ஓரளவுக்கு வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக நயன்தாராவின் சீதை கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டது. பலரும் அவரை கூப்பிட்டு பாராட்டியதாக நயன்தாராவே தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா, அடுத்து ராமாயணத்தை மையப்படுத்தி, ராவணன் என்ற பெயரில் ஒரு புராண படத்தை எடுக்க இருக்கிறார். இதில் ஹீரோவாக நாகர்ஜூனா நடிக்கிறார். இதில் மீண்டும் சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவை அழைத்துள்ளனர். ஸ்ரீராமராஜ்யம் படத்தில் நயன்தாராவுக்கு, சீதை வேடம் கச்சிதமாக பொருந்தியதால் ராவணன் படத்திலும் அவரையே சீதை வேடத்துக்கு ஒப்பந்தம் செய்யுங்கள் என்று இயக்குநரை, நாகார்ஜூனா வலியுறுத்தி இருக்கிறார். மேலும் சீதையாக நயன்தாரா நடித்தால் தான், நான் நடிப்பேன் என்று கூறிவிட்டாராம் நாகர்ஜூனா. இதனால் நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட படக்குழுவினர்.
ஏற்கனவே நயன்தாரா மீண்டும் படத்தில் நடிப்பேன் என்று சூசகமாக தெரிவித்து இருந்தார். அதுமட்டுமின்றி இந்தபடத்திலும் அவருடைய வேடம் சீதை என்பதால், நிச்சயமாக நயன்தாரா நடிப்பார் என்று தெலுங்கு வட்டாராத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

புதன், நவம்பர் 30

அழகான பெண்கள் அண்ணா என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்

எனக்கு இரண்டு தங்கச்சிங்க இருக்காங்க. அது போதும், இனியும் யாரும் என்னை அண்ணா என்று கூப்பிட வேண்டாம் என்று எரிச்சலுடன் கூறுகிறாராம் சல்மான் கான். 


பாலிவுட் நடிகர் சல்மான் கான் வரும் டிசம்பர் மாதம் 27ம் தேதி தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறார். அவரை ரசிகர்கள், நண்பர்கள், திரையுலகினர் என பலரும் அன்புடன் அண்ணா என்றே அழைக்கின்றனர். இதைப் பார்த்த கதாநாயகிகளும் சேஃபாக சல்மான் அண்ணா என்று அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

இன்னும் திருமணம் ஆகாத தன்னை நடிகைகள் வாய் நிறைய அண்ணா என்று அழைப்பது சல்மானுக்கு எரிச்சலூட்டுகிறது. 

அண்மையில் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் கான் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென்னிந்திய நடிகை ஒருவர் சல்மானை அண்ணா என்று அழைத்துள்ளார். அவ்வளவு தான் போங்க, சல்மானுக்கு கோபம் வந்துவிட்டது.

எனக்கு ஏற்கனவே 2 சகோதரிகள் உள்ளனர். அதுவே போதும். இனி அண்ணா என்று அழைக்காதீர்கள். சல்மான் என்று கூப்பிட்டால் போதும் என்று பொரிந்து தள்ளியுள்ளார்.

சல்மான் கானை அவரைவிட பெரியவரான பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியும் அண்ணா என்று அழைத்தவுடன் அவருக்கு ஆத்திரம் தாங்கமுடியவில்லை. இது என்னடா என்னைய விட வயதில் மூத்தவரெல்லாம் அண்ணா என்கிறார் என்று நொந்துவிட்டார். குசும்பு இணையம்.

நான் உங்க திருமணத்திற்கு வந்தபோது எனக்கு 10வயது தான். அப்படி இருக்கையில் நீங்கள் ஏன் என்னை அண்ணா என்கிறீர்கள் என்று சுனிலிடம் கேட்டுள்ளார் சல்லு. 



இலவசமாக SWEDAN சென்று வர தொடர்பு கொள்ளுங்கள் : 071 452 8054
http://www.adicsrilanka.org/Digital_stories_2011_Home.html