திங்கள், ஜனவரி 30

ரிச்சா ஓர் அழகு வற்றாத அருவி: வெங்கட்ராம்

நடிகை ரிச்சா ஓர் அழகு வற்றாத அருவி என்று புகைப்படப்பிடிப்பாளர் வெங்கட்ராமன் கூறியுள்ளார்.
ஒவ்வொரு வருட காலண்டருக்காக நடிகர், நடிகைகளி்ன் புகைப்படகங்களை வேறு கோணத்தில் எடுப்பது புகைப்படப் பிடிப்பாளர் வெங்கட்ராமுடைய தனிச்சிறப்பு.

 இந்த வருடமும் தமிழில் உள்ள முன்னணி கதாநாயகிகளுடைய புகைப்படங்களை வைத்து ஓர் காலண்டரை இவர் வடிவமைத்துள்ளார்.
வெங்கட்ராம் எடுத்த புகைப்படங்களில் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய புகைப்படம் ரசிகர்களுக்கிடையே அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளது.
இது குறித்து கலைஞர் வெங்கட்ராம் கூறியதாவது, பெண்களுக்கு கண்கள் மட்டும் அழகாக அமைந்தால் போதும் அவர்கள் என்ன உடை அணிந்தாலும் அது அழகாக இருக்கும்.

ரிச்சாவும் அப்படித்தான், அவர் ஓர் அழகு வற்றாத அருவி. அவர்களுக்கான உடையை அவர் மட்டும் தான் அணிய முடியும்.
ஒரு வலை மாதிரி இருந்த அந்த உடை ரிச்சாவிற்கு தவிற வேறு எந்த நடிகைகளுக்கும் ஒத்துவரவில்லை. 

காலண்டர் படப்பிடிப்பு முடிந்த பிறகு என்னை இப்படி அழகா எடுத்துட்டீங்களேன்னு தன்னைப் பற்றி அவரே புகழ்ந்து கொண்டார் ரிச்சா.
இது ஒரு புகைப்படப்பிடிப்பாளருக்கு கிடைத்த வெற்றி என்று கூறலாம் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக