செவ்வாய், நவம்பர் 1

இளையராஜாவின் மனைவி காலமானார்



தமிழ் திரைப்பட உலகில், கடந்த 30 ஆண்டுகளாக, 950க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. தி.நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் இவருக்கு, ஜீவா, 58, என்றமனைவியும், கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜாஎன்ற இரு மகன்களும்,பவதாரணி என்ற மகளும்உள்ளனர். அவரது மனைவி ஜீவாவுக்கு நேற்றிரவு 10 மணியளவில், திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
அருகில்உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரைபரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக, கூறினர்.இசையமைப்பதற்காக,ஐதராபாத் சென்றுள்ளஇளையராஜாவுக்கு, இந்ததகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், இன்று காலைசென்னை வருவார், எனஅவரது குடும்பத்தினர்தெரிவித்தனர்.மறைந்த ஜீவா, கடைசியாக, சென்னையில் நடந்தசத்தியஜோதி தியாகராஜன் மணி விழாவில், பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக