ஞாயிறு, மே 15

மூக்கு குத்திக்கொள்வது ஏன் ? ?



மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா? அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம். 

இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழங்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள். 

ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.

மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். 

அந்தக்காலத்தில் ஆண்களும் காது குத்திக்கொள்வது இதனால்தான் ம்ம்ம்…… இந்தக்காலத்திலும் ஆண்கள் காது குத்தும் வழங்கம் வந்துவிட்டது ஆனால் கவரிங் எந்த பிரயோசனமும் இல்லை வெறும் அழகுக்கு மட்டுமே தவிர ஆரோக்கியத்துக்கு சரிவராது.

1 கருத்து:

  1. தலைப்பை பார்த்தவுடன் நான் தப்பாக புரிந்திட்டெனெங்க அதாவது மூக்குக்குள்ளை விரலை விட்டு சிலபேர் குத்துவினம் அதைத்தான் நீங்களும் சொல்றீங்களோ என்ற நினைப்புடன் தான் உள்ளை வந்திட்டன், நான் நினைத்தது தப்பென்றாலும் வந்த இடம் பாருங்கோ தப்பில்லை.
    நல்ல விடயங்களைத்தான் நீங்களும் புகுத்தியுள்ளீங்க உங்களை பாராட்டுமளவிற்கு நான் அறிவாளியுமில்லை, பெரியவனுமில்லை இருந்தாலும் இணைப்பிற்கு நன்றி சொல்லலாம் தானே...இன்னுமொரு விசயம் பாருங்கோ அதாவது உந்த மூக்குக்குள்ளை விரலை விட்டு துளைக்கிறமாதிரி மற்றவையின்ரை விடயத்திலை மூக்கை நுளைக்கிறவை பற்றியும் கொஞ்சம் கவனத்திலை எடுங்களேன்.அளவுக்கு அதிகமாக கொட்டிட்டேனோ அட சீ..எழுதிட்டனோ? அப்ப நான் போயிட்டு வரட்டுமா?

    பதிலளிநீக்கு