வியாழன், ஜூன் 14

குத்துச்சண்டை வீராங்கனையாக மாறினார் த்ரிஷா

நடிகை த்ரிஷா, சிறந்த குத்துச்சண்டை வீராங்கனை என்று பூலோகம் படத்தின் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் பூலோகம்.
இந்த திரைப்படத்தில் த்ரிஷாவின் நடிப்பைப் பார்த்து வியந்து போன இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் 'லேடி பாக்ஸர்' (குத்துச்சண்டை வீராங்கனை) என்று பெயர் சூட்டியுள்ளார்.
இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷாவே கூறியுள்ளார்.
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் திரைப்படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி, த்ரிஷா இணையும் திரைப்படம் பூலோகம்.
இதில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். கதாநாயகி த்ரிஷாவிற்கு வலுவான கதாபாத்திரமாம்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் த்ரிஷா கூறியுள்ளதாவது, பூலோகத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலுவானது.
ஜெயம் ரவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் பெண்ணாக இந்த திரைப்படத்தில் நடிக்கிறேன். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்துக்கு பலமே நான் தான் என்று கூறியுள்ளார்.
ஒஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் பூலோகம் திரைப்படத்தை நவம்பர் 15ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக